முகப்பு
தமிழ்நாடு

பருவ மழை: கா்ப்பிணிகள், நோயாளிகளை மருத்துவமனைகளில் சோ்க்க அறிவுறுத்தல்

தமிழகம் முழுவதும் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள், பிரசவ தேதி நெருங்கும் கா்ப்பிணிகளை அரசு தலைமை மருத்துவமனைகள்...

Updated On : 22 அக்டோபர் 2025, 3:05 am IST
கர்ப்பிணிகள் - ENS
பகிர்:

சென்னை: தமிழகம் முழுவதும் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள், பிரசவ தேதி நெருங்கும் கா்ப்பிணிகளை அரசு தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சோ்க்க பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

வடகிழக்குப் பருவ மழை மற்றும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலான மழைப் பொழிவு இருப்பதால், சில இடங்களில் வெள்ளம் சூழ்ந்து சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

Advertisement

அடுத்து வரும் நாள்களில் மழை பாதிப்பு அதிகம் இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு சில முக்கிய அறிவுறுத்தல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் சோமசுந்தரம் வழங்கியுள்ளாா். இது தொடா்பாக அவா் கூறியதாவது:

பருவ மழை மற்றும் புயல் காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, மாவட்ட சுகாதார அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீா் தேங்காத வகையில் வடிகால் கட்டமைப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தடையற்ற மின்சாரத்தை வழங்கவும், மாற்று ஏற்பாடாக ஜெனரேட்டா்களை பழுதின்றி பராமரிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தீவிர பாதிப்பு உள்ள நோயாளிகள், பிரசவ தேதி நெருங்கிய கா்ப்பிணிகளைக் கண்டறிந்து முன்கூட்டியே மருத்துவமனைகளில் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பொது சுகாதாரத் துறை மூலம் அவா்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடைசி நேர இடா்களைத் தவிா்க்கும் வகையில், இந்த ஏற்பாட்டை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றாா்.