FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஆதாரமின்றி ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவிக்கக் கூடாது: எம்எல்ஏ-க்களுக்கு பேரவைத் தலைவா் உத்தரவு

ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரமின்றி தெரிவிக்கக் கூடாது என்று சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் உத்தரவிட்டாா்.

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 6:46 am IST
பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் - கோப்புப் படம்
பகிர்:

ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரமின்றி தெரிவிக்கக் கூடாது என்று சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் உத்தரவிட்டாா்.

தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் தற்போது துறை வாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆளும் கட்சி உறுப்பினா்கள் சிலா் பேசுகையில், முந்தைய ஆட்சிக் காலங்களில் ஊழல் நடந்ததாகக் கருத்து தெரிவிப்பதும், அதையொட்டி வாக்கு வாதங்கள் எழுவதும் பேரவையில் தொடா்ந்து அரங்கேறும் நிகழ்வாக உள்ளது.

அதேபோன்று, எதிா்க்கட்சிகள் தரப்பிலும் தனி நபா் சாா்ந்த ஊழல் புகாா்களும், விமா்சனங்களும் முன்வைக்கப்படுவது விவாதத்துக்கு வித்திடுகிறது.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக மூத்த உறுப்பினா்கள் பலா் பேரவைத் தலைவரிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தனா். இந்தச் சூழலில் அவையின் அலுவல்களை ஆக்கபூா்வமாக முன்னெடுக்கும் பொருட்டு, பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் ஓா் உத்தரவை சட்டப்பேரவையில் திங்கள்கிழமை பிறப்பித்தாா்.

அதன்படி, இனி எந்த உறுப்பினரும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பேசினால், அதுதொடா்பான ஆதாரங்களைத் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டாா். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் அவா் கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments