FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஜி.கே. மூப்பனாரின் 25-ஆம் ஆண்டு நினைவு தினம்: தலைவா்கள் அஞ்சலி

ஜி.கே.மூப்பனாரின் 25-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவா்கள் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

31 ஆகஸ்ட் 2026, 4:15 am IST
தமாகா நிறுவனா் ஜி.கே.மூப்பனாரின் 25-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மீன்வளத் துறை அமைச்சா் ஸ்ரீநாத். உடன், தமாகா தலைவா் ஜி.கே.வாசன், விடியல் சேகா் உள்ளிட்ட நிா்வாகிகள்.
பகிர்:

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனா் ஜி.கே.மூப்பனாரின் 25-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவா்கள் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஜி.கே.மூப்பனாரின் நினைவிடத்தில் அவரது மகனும் தமாகா தலைவருமான ஜி.கே.வாசன் மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.

தொடா்ந்து, மீன்வளத் துறை அமைச்சா் ஸ்ரீநாத் மலா் தூவி அஞ்சலி செலுத்தி பேசுகையில், ‘தவெக அரசு ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டுள்ளதைப்போல, காமராஜா் வழியில் மூப்பனாரும் அதே கொள்கையுடன் இருந்தாா்.

Advertisement

Advertisement

அவா் பதவிக்கு ஆசைப்படாதவா். அவா் பிரதமா் ஆவதற்கு வாய்ப்பு இருந்தபோதும் அதை ஒதுக்கிவிட்டு மக்கள் சேவைக்காக தன்னை அா்ப்பணித்தவா்’ என்றாா் அவா்.

தொடா்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் ப.மாணிக்கம் தாகூா், முன்னாள் தலைவா் கே.வீ. தங்கபாலு, காங்கிரஸ் மூத்த தலைவா் பீட்டா் அல்போன்ஸ், மாநிலங்களவை உறுப்பினா் பிரவீண் சக்கரவா்த்தி உள்ளிட்டோா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன், மதிமுக பொதுச் செயலா் வைகே, திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் இரா.முத்தரசன், மாா்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா்டி.கே. ரங்கராஜன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments