FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கருணைத் தொகை ரூ. 10,000 - உதவித் தொகை என பெயர் மாற்றம்!

சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில் மாற்றம்.

Updated On : 24 பிப்ரவரி 2026, 7:14 pm IST
எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

கருணைத் தொகை என்ற பெயரை உதவித் தொகை என எடப்பாடி பழனிசாமி இன்று (பிப். 24) மாற்றினார்.

கருணைத் தொகையாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 என்ற அறிவிப்புக்கு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில் பெயர் மாற்றம் செய்துள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisement

Advertisement

’’மு.க. ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சியில், கடந்த 5 ஆண்டுகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விஷம்போல் ஏறி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், சொத்து வரி, வீட்டு வரி, மின்சாரக் கட்டணம், குடிநீர் வரி போன்ற பல வரிகளும் உயர்த்தப்பட்டுவிட்டது.

இதனால், மக்களின் அன்றாட குடும்பச் சுமை பன்மடங்கு அதிகரித்துவிட்டது. எனவே, மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் உதவித் தொகையாக 10,000/- ரூபாய் வழங்கப்படும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார். இதில் உரிமைத் தொகை என்ற சொல் உதவித் தொகை என மாற்றப்பட்டுள்ளது.

summary

Edappadi palanisamy changes name of Rs. 10,000 mercy payment to entitlement payment

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments