குதிரைச் சந்தை! அதிக வாக்குகளைப் பெற்றவர்களுக்குத்தான் அதிக விலை!
குதிரை பேரம் குறித்து கி. வீரமணி கூறியது பற்றி...
தமிழகத்தில் குதிரைச் சந்தை எல்லோரும் பார்க்கக் கூடிய அளவுக்கு மலிவாக இருப்பதாக திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.
தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகக் கூறி திராவிட கழகத்தின் தலைவர் கி. வீரமணியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
விழுப்புரத்தில் இது தொடர்பாக செய்தியாளர்களுடன் கி. வீரமணி பேசியதாவது, "முன்பெல்லாம் மாட்டுச் சந்தை, ஆடுகள் வியாபாரம் இருந்தது. இப்போது குதிரை சந்தையும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
அரேபியா போன்ற இடங்களில் நடக்கக் கூடிய குதிரைச் சந்தை, இப்போது மலிவாக எல்லோரும் பார்க்கக் கூடிய அளவுக்கு, வாக்களித்த மக்களையே ஏமாற்றும் அளவுக்கு ஏற்பட்டிருக்கும் புதிய வளர்ச்சி என்னவென்றால், குதிரைச் சந்தை.
குதிரைச் சந்தைக்கு நல்ல விலையும் கிடைக்கிறது. இப்போதெல்லாம் அதிக விலை யாருக்கு என்றால், மக்களிடம் அதிக வாக்குகள் பெற்றவர்களுக்குத்தான் அதிக விலை" என்று தெரிவித்தார்.
In the horse-trading market, the highest prices go to those who have secured the most votes
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.