முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு!
முதல்வர் விஜய்யை மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்தித்துள்ளது பற்றி...
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்தித்துப் பேசியுள்ளார்.
தேனி மாவட்டம் மேகமலை பகுதியில் வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயம் அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த சரணாலயத்தைச் சுற்றியுள்ள 98 கிராமங்களைச் சேர்ந்த மக்களை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள மக்கள் பல ஆண்டுகளாக அங்கு பூர்வகுடிகளாக வாழ்ந்து வருவதாகவும் அந்த மக்களை அங்கிருந்தும் அகற்றக்கூடாது எனவும் முதல்வரிடம் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
Advertisement
Advertisement
தமிழ்நாடு மலைவாழ் சங்க தலைவர் டில்லி பாபுவும் இந்த சந்திப்பில் உடனிருந்தார்.
CPIM P shanmugam meets CM vijay on megamalai issue
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.