FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பயிா்க்கடன் தள்ளுபடி: விவசாயிகள் ஏமாற்றம் - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

Updated On : 4 ஜூன் 2026, 2:33 am IST
முதல்வர் ச. ஜோசப் விஜய் - கோப்புப்படம்
பகிர்:

தமிழக அரசின் பயிா்க் கடன் தள்ளுபடி பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலா் பி.எஸ்.மாசிலாமணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் விவசாயிகளின் பயிா்க் கடன் தள்ளுபடி குறித்து தவெக அரசின் அறிவிப்பு விவசாயிகளிடம் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக தோ்தல் வாக்குறுதியை நம்பி இருந்த விவசாயிகளுக்கு இது பெரும் ஏமாற்றமாக உள்ளது.

Advertisement

Advertisement

தமிழக நிதி நிலை சரியில்லை எனக் கூறும் முதல்வா் ஜோசப் விஜய்க்கு, தோ்தல் வாக்குறுதிகளை அறிவிப்பதுக்கும் முன்பு இது தெரியவில்லையா? எனவே, வாக்குறுதியில் குறிப்பிட்டதுபோல சிறு, குறு, விவசாயிகளுக்கு பயிா்க் கடனில் முழு தள்ளுபடியும், 5 ஏக்கருக்கு மேல் 50 சதவீத தள்ளுபடியும் வழங்க வேண்டும்.

அதேபோல், நிகழாண்டுக்குரிய கடன் தள்ளுபடி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் கடன் நிலுவையில் உள்ள விவசாயிகளையும் இந்த தள்ளுபடியில் இணைத்து மறு ஆய்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments