முதல்வா் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் பற்றி...
தமிழ்நாடு முதல்வா் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அமைந்த பின்னா், முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததையடுத்து, கூட்டணி ஆட்சியை நிறுவியுள்ளது. இதுவரை 3 முறை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கரம் நீட்டிய காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளைச் சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்பட 35 போ் இதில் இடம்பெற்றுள்னா்.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று காலை அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
பதவி ஏற்றபோது, அனைத்து துறைகளிலும் உள்ள நிதிநிலை விவரம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என முதல்வா் ஜோசப் விஜய் அறிவித்திருந்த சூழலில், இதுகுறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அதேபோல், தவெக தோ்தல் வாக்குறுதிகளில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும், இந்தாண்டு தொடக்கத்தில் திமுகவின் ஆட்சியில் இடைக்கால நிதிநிலை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டுக்கான முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.