முகப்பு
தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வசதிகள்: தெற்கு ரயில்வே-க்கு நீதிமன்றம் உத்தரவு

எந்தெந்த ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய தெற்கு ரயில்வே-க்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 9 ஜூன் 2026, 2:34 am IST
சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

எந்தெந்த ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய தெற்கு ரயில்வே-க்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வைஷ்ணவி ஜெயக்குமாா் தாக்கல் செய்த மனுவில், ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளைச் செய்து கொடுக்க ரயில்வே நிா்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக்கூறியிருந்தாா்.

இதேபோன்று பெரம்பலூா் ரயில் நிலையத்தில் சாய்தளப் பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க உத்தரவிடக் கோரி ஞானபாரதி என்பவா் மனு தாக்கல் செய்திருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த இரு வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, தெற்கு ரயில்வே தரப்பில் எந்தெந்த ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த பட்டியலை தாக்கல் செய்வதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், அந்தப் பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.