FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் 28,000 குடியிருப்புகள்: அமைச்சா் ப.ராஜ்குமாா்

Updated On : 12 ஜூன் 2026, 3:43 am IST
சென்னையில் உள்ள தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சி துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் தலைமையில்  வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டம். உடன், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலை
பகிர்:

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ரூ.3,766.24 கோடியில் 28,551 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன என்று வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் தெரிவித்தாா்.

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அந்தத் துறையின் அமைச்சா் ராஜ்குமாா் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவா் கு.ப.கிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சா் பேசியதாவது:

Advertisement

Advertisement

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் சென்னையில் 21 இடங்களில் ரூ.1,230.42 கோடியில் 7,179 அடுக்குமாடி குடியிருப்புகளும், பிற மாவட்டங்களில் 39 இடங்களில் ரூ.2,535.82 கோடியில் 21,372 அடுக்குமாடி குடியிருப்புகளும் என மொத்தம், 60 திட்டப்பகுதிகளில் ரூ.3,766.24 கோடியில் 28,551 அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டப்பட்டு வருகின்றன.

ஆசிய வளா்ச்சி வங்கி திட்டத்தின் கீழ், 6 இடங்களில் ரூ. 1,030 கோடியில் 5,457 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. புனரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.210 கோடியில் 215 இடங்களில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்காகக் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளை நல்ல தரத்துடனும், உறுதியிடனும், உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments