முகப்பு
தமிழ்நாடு

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதல்வர் விஜய்!

முதல்வர் விஜய் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கியது குறித்து...

Updated On : 28 ஜூன் 2026, 10:10 am IST
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதல்வர் விஜய். - படம்: டிஐபிஆர்
பகிர்:

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று (ஜூன் 28) நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் சி. ஜோசப் விஜய், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கினார்.

மேலும், குழந்தைகளுக்கான பரிசுப் பொருள்களையும் முதல்வர் விஜய் வழங்கினார்.

இந்தியாவில் போலியோவை (இளம் பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக ஆண்டு தோறும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இரு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது.

Advertisement

Advertisement

இதன் பயனாக போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்ததால், கடந்த 6 ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

அதன்படி, நிகழ் ஆண்டுக்கான போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில், சென்னை பாலவாக்கத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமில், முதல்வர் சி. ஜோசப் விஜய், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கினார்.

இந்த முகாமில் 5 வயதுக்குள்பட்ட 52.91 லட்சம் குழந்தைகளுக்கு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

summary

As the polio vaccination drive is underway across Tamil Nadu today (June 28), Chief Minister C. Joseph Vijay administered polio drops to children.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments