சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!
விஞ்ஞானி சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்றுக் கொண்டது குறித்து...
சென்னையில் உள்ள தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவராக விஞ்ஞானி சிவானந்த தாமோதர பை இன்று(மார்ச் 19) பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த 1992 ஆம் ஆண்டு வானிலை ஆய்வு மையத்தில் விஞ்ஞானியாகச் சேர்ந்த இவர், சுமார் 34 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர்.
கடந்த ஒர் ஆண்டாக தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த விஞ்ஞானி அமுதா அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், சென்னை தென்மண்டல வானிலை ஆய்வு மையத்திற்கு புதிய தலைவராக சிவானந்த தாமோதர பை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த 1992ல் இந்திய வானிலை ஆய்வுத் துறையில் விஞ்ஞானியாக இணைந்த சிவானந்த தாமோதர பை, இந்திய வானிலை துறையின் பல்வேறு பிரிவுகளில் 34 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வந்துள்ளார்.
தற்போதைய பொறுப்புக்கு முன்பு, அவர் தில்லியில் உள்ள புவி அறிவியல் அமைச்சகத்தின் திட்ட இயக்குநராகவும், இந்திய வானிலை துறையின் வேளாண் வானிலை ஆலோசனைப் பிரிவின் தலைவராகவும் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
Scientist Sivananda Damodar Pai took charge as the head of the Southern Regional Meteorological Centre in Chennai today (March 19).