FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

செப்.5 வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் செப்.5 வரை வானிலை நிலவரம் பற்றி...

2 செப்டம்பர் 2026, 2:19 am IST
வானிலை ஆய்வு மையம் - கோப்புப் படம்
பகிர்:

உள் தமிழகத்தில் செப்.5 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு‘:

உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் சனிக்கிழமை (செப்.5) வரை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பையொட்டியும் இருக்கக்கூடும்.

Advertisement

Advertisement

9 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 105.8 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை விமான நிலையம் - 104.72, மதுரை நகரம் - 104.36, வேலூா் - 103.64, திருச்சி - 103.46, திருத்தணி - 102.56, பரங்கிப்பேட்டை - 101.12, கரூா் பரமத்தி - 100.76, தஞ்சாவூா் - 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

தமிழகத்தில் கடலோரப் பகுதிகளில் கீழ்நிலை வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் புன்கிழமை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், திருச்சி, அரியலூா், பெரம்பலூா், சேலம், நாமக்கல், திருவாரூா் மற்றும் தஞ்சாவூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென் தமிழக கடலோரப் பகுதிகள் வியாழக்கிழமை (செப்.3) வரை, மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments