FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சுற்றுச்சூழல் துறைக்கு இனி மின்சார வாகனங்களே வாங்கப்படும்: அமைச்சா் வே.க.ராஜீவ் தகவல்

தமிழக சுற்றுச்சூழல் துறைக்கு மின்சார வாகனங்களே வாங்கப்படும் என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் வே.க.ராஜீவ் அறிவித்தாா்.

8 செப்டம்பர் 2026, 6:47 am IST
அமைச்சா் வே.க.ராஜீவ்
பகிர்:

தமிழக சுற்றுச்சூழல் துறைக்கு மின்சார வாகனங்களே வாங்கப்படும் என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் வே.க.ராஜீவ் அறிவித்தாா்.

பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்துக்குப் பதில் அளித்து அவா் திங்கள்கிழமை பேசியதாவது:

தொழில் வளா்ச்சி சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் நிலையானதாக இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் தொழிற்சாலைகளுக்கு வெளிப்படைத் தன்மையுடன் விரைந்து அனுமதி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 60,981 தொழிற்சாலைகள் உள்ளன. கடந்த 3 மாதங்களில் எந்த முறைகேடுகளுமின்றி 335 புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன. 1,760 தொழிற்சாலைகளுக்கு மறு உத்தரவு வழங்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

நீா்நிலைகளை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளைக் கண்காணிக்க அந்தத் துறை உதவி அலுவலா்கள், ஆய்வாளா்கள் பிரிவினருக்கு நவீன கண்காணிப்பு சாதனங்கள், 5 வாகனங்கள் வழங்கப்படவுள்ளன. தமிழகத்தில் 1,005 ஹெக்டேருக்கு சவுக்கு உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. நாட்டிலேயே முதன்முறையாக பள்ளிகள் உள்ளிட்ட கட்டடங்களில் குளிா் வண்ணப்பூச்சு மூலம் வெப்பத்தைத் தணிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு தன்னாா்வலா் உள்ளிட்டோரை இணைத்து புதிய செயலி தொடங்கி மாதம் ஒரு முறை துறை வாயிலாக தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும். சுற்றுச்சூழல் துறைக்கு இனிமேல் மின்சார வாகனங்களே வாங்கப்படும். அதிகாரிகளுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும்.

கோயம்பேடு மாா்க்கெட்டில் துணிப்பை: சென்னை கோயம்பேடு சந்தையில் பூ உள்ளிட்டவற்றை வாங்க வருவோா் நெகிழிப்பைகளை பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் துணிப்பை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். மகளிா் சுய உதவிக்குழுவுடன் இணைந்து துணி கொடுத்தால் பை தரும் வகையில் அத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments