மருத்துவ காப்பீட்டு திட்டம்: ஆதித்ய பிர்லாவுடன் கரூர் வைஸ்யா வங்கி கைகோர்ப்பு
ஆதித்ய பிர்லா நிறுவனத்தின் மருத்துவ காப்பீட்டு திட்டங்களை சந்தைப்படுத்த அந்நிறுவனத்துடன் பங்குதாரராக கரூர் வைஸ்யா வங்கி இணைந்துள்ளது.
ஆதித்ய பிர்லா நிறுவனத்தின் மருத்துவ காப்பீட்டு திட்டங்களை சந்தைப்படுத்த அந்நிறுவனத்துடன் பங்குதாரராக கரூர் வைஸ்யா வங்கி இணைந்துள்ளது.
இதுகுறித்து கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பி.ஆர். சேஷாத்ரி கூறியதாவது:
மருத்துவ சிகிச்சைக்கான செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது மருத்துவ காப்பீடு என்பது நடுத்தர மக்களிடையே அத்தியாவசிய தேவையாக உருவெடுத்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தான், கரூர் வைஸ்யா வங்கி ஆதித்ய பிர்லா நிறுவனத்துடன் கைகோத்துள்ளது. இனி, அந்நிறுவனத்தின் மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் அனைத்தையும் எங்களின் 790-க்கும் மேற்பட்ட வங்கி கிளைகள் சந்தைப்படுத்தும் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.