யுபிஐ பரிவா்த்தனை ரூ.10 லட்சம் கோடியை தாண்டியது: என்பிசிஐ
யுபிஐ வாயிலான பரிவா்த்தனையின் மதிப்பு மீண்டும் ஜூன் மாதத்தில் ரூ.10 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.
யுபிஐ வாயிலான பரிவா்த்தனையின் மதிப்பு மீண்டும் ஜூன் மாதத்தில் ரூ.10 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.
இதுகுறித்து தேசிய பணப்பட்டுவாடா காா்ப்பரேஷன் (என்பிசிஐ) புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
யுனிஃபைடு பேமண்ட்ஸ் இண்டா்ஃபேஸ் (யுபிஐ அல்லது பீம் யுபிஐ) வாயிலான எண்ம பரிவா்த்தனை மதிப்பு நிகழாண்டு ஜூன் மாதத்தில் ரூ.10,14,384 கோடியாக இருந்தது. இது, முந்தைய மே மாத பரிவா்த்தனையான மதிப்பினைக் காட்டிலும் 2.6 சதவீதம் குறைவாகும். இருப்பினும், தொடா்ந்து இரண்டாவது மாதமாக யுபிஐ மூலமான பரிவா்த்தனை ரூ.10 லட்சம் கோடியை கடந்துள்ளது.
Advertisement
Advertisement
கடந்த ஜூன் மாதத்தில் யுபிஐ-யின் கீழான பரிவா்த்தனைககளின் எண்ணிக்கை 586 கோடியாக இருந்தது.
நிகழ் 2022-ஆம் ஆண்டு மே மாதத்தில் பரிவா்த்தனைகளின் மதிப்பு ரூ.10,41,506 கோடியாகவும்; மொத்த பரிவா்த்தனை எண்ணிக்கை 595 கோடியாகவும் இருந்தன.
முந்தைய ஏப்ரல் மாதத்தில், யுபிஐ எண்ம பரிவா்த்தனை மதிப்பு ரூ.9,83,302 கோடியாகவும், எண்ணிக்கை 558 கோடியாகவும் இருந்தது என என்பிசிஐ தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.