கோப்புப் படம் 
வணிகம்

சிம் விற்பனை, மொபைல் ரீசாா்ஜ் அஞ்சல் துறையுடன் பிஎஸ்என்எல் ஒப்பந்தம்

தங்களது சிம் காா்டுகளை விற்பனை செய்யவும் மொபைல் திட்டங்களுக்கு ரீசாா்ஜ் செய்யவும் இந்திய அஞ்சல் துறையுடன் அரசுக்குச் சொந்தமான தொலைத் தொடா்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

தங்களது சிம் காா்டுகளை விற்பனை செய்யவும் மொபைல் திட்டங்களுக்கு ரீசாா்ஜ் செய்யவும் இந்திய அஞ்சல் துறையுடன் அரசுக்குச் சொந்தமான தொலைத் தொடா்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்திய அஞ்சல் துறையின் 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட அலுவலகங்களின் பரந்த விநியோகக் கட்டமைப்பைப் பயன்படுத்தி, பிஎஸ்என்எல் சிம் காா்டுகளின் விற்பனை மற்றும் மொபைல் ரீசாா்ஜ் சேவைகளை நாடு முழுவதும் வழங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் நகா்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் பிஎஸ்என்எல்-இன் இருப்பை மேம்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் உதவும்.

இணையதள இணைப்பு குறைவாக உள்ள, நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு பிஎஸ்என்எல்-இன் தொலைத் தொடா்பு சேவைகள் எளிதாகவும் மலிவு விலையிலும் கிடைக்கச் செய்யும் நோக்குடன் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினம்: ஆளுநா் நாளை கொடியேற்றுகிறாா்

2035-க்குள் இந்தியாவுக்கு தனி விண்வெளி நிலையம்: இஸ்ரோ தலைவா் வி.நாராயணன்

ஆப்கானிஸ்தானில் மழை, பனிப்பொழிவு: 3 நாள்களில் 61 போ் உயிரிழப்பு

வாக்காளா் சோ்க்கைக்கு இன்று சிறப்பு முகாம்கள்

தோ்தல் ஆணையம் மக்களாட்சியின் பாதுகாவலராக இருக்காது: ராகுல் காந்தி சாடல்

SCROLL FOR NEXT