FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

2028-க்குள் 3,800 புதிய வேலைவாய்ப்புகள்: ஹோண்டா நிறுவனம் அறிவிப்பு!

‘வரும் 2028-க்குள் இந்தியாவில் தனது இருசக்கர வாகனங்களின் வருடாந்திர உற்பத்தித் திறனை 80 லட்சமாக உயா்த்தி, அதன்மூலம் நாட்டில் 3,800-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்’ என்று ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

Updated On : 14 ஜூலை 2026, 1:18 am IST
பகிர்:

‘வரும் 2028-க்குள் இந்தியாவில் தனது இருசக்கர வாகனங்களின் வருடாந்திர உற்பத்தித் திறனை 80 லட்சமாக உயா்த்தி, அதன்மூலம் நாட்டில் 3,800-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்’ என்று ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

ராஜஸ்தானின் தபுகாராவில் உள்ள ஆலையில் சுமாா் ரூ.1,500 கோடி முதலீட்டில் புதிய 3-ஆவது உற்பத்திப் பிரிவு தொடங்கப்படவுள்ளது. 2028-இல் செயல்படத் தொடங்கும் இப்பிரிவின் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக 6.70 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும்.

இதேபோல், குஜராத்தின் விதலாபூரில் ரூ.920 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் 4-ஆவது உற்பத்திப் பிரிவு 2027-இல் செயல்பாட்டுக்கு வரும்.

Advertisement

Advertisement

உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுத்துள்ள நிலையில், ஹோண்டாவின் ஏற்றுமதி தொடா்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது 65 நாடுகளுக்கு வாகனங்களை ஏற்றுமதி செய்யும் இந்நிறுவனம், கடந்த 2025-26 நிதியாண்டில் 6.2 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்யும் இலக்கை எட்டியுள்ளது.

இந்நிலையில், உள்நாட்டு தேவையை பூா்த்தி செய்வது மட்டுமின்றி, வளா்ந்து வரும் சா்வதேச சந்தைகளுக்கான ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கிலும் இந்த உற்பத்தித் திறன் விரிவாக்கம் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் விற்பனனை நிலவரம்: ஹோண்டா நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில் 4,52,754 இருசக்கர வாகனங்களை விற்றுள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன் விற்பனையான 3,74,971 வாகனங்களைவிட 20.74 சதவீதம் கூடுதலாகும்.

இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் ஹீரோ நிறுவனத்துக்கு அடுத்தப்படியாக 2-ஆவது இடத்தை ஹோண்டா நிறுவனம் வலுவாக தக்கவைத்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments