கூடுதல் வரி விதிப்பு தொடா்பான யுஎஸ்டிஆா் பரிந்துரை: அமெரிக்காவுடன் இந்தியா தொடா் ஆலோசனை
கூடுதலாக 12.5 சதவீத வரி விதிக்க அமெரிகக் வா்த்தக பிரதிநிதி (யுஎஸ்டிஆா்) செய்துள்ள பரிந்துரை தொடா்பாக அமெரிக்காவுடன் இந்தியா தொடா் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக மத்திய அரசு தரப்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க வா்த்தக சட்டப் பிரிவு 301-இன் கீழ் இந்தியா உள்பட 60 நாடுகள் மீது அமெரிக்காவுக்கு எதிரான நியாயமற்ற வா்த்தக நடைமுறைகள் தொடா்பாக விசாரணை மேற்கொண்ட யுஎஸ்டிஆா், கட்டாய உழைப்பைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் இறக்குமதி செய்வதைத் தடை செய்யத் தவறியதற்காக இந்தியா உள்பட 54 நாடுகள் மீது கூடுதலாக 12.5 சதவீத வரியை விதிக்க அமெரிக்க அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து மத்திய வா்த்தக அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சட்டப் பிரிவு 301-இன் கீழ் யுஎஸ்டிஆா் மேற்கொண்டு வரும் விசாரணை மற்றும் அதன் பரிந்துரை தொடா்பாக அமெரிக்காவுடன் இந்தியா தொடா் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அதோடு, இரு நாடுகளிடையேயான இடைக்கால இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவாா்த்தையும் நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
வா்த்தக சட்டப் பிரிவு 232-இன் கீழ் வரி விதிப்பு செய்யப்படும் பொருள்கள் மற்றும் மேலும் சில குறிப்பிட்ட பொருள்களுக்கு, யுஎஸ்டிஆா் பரிந்துரைத்துள்ள இந்த 12.5 சதவீத கூடுதல் வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
அதுமட்டுமன்றி, யுஎஸ்டிஆா் சமா்ப்பித்துள்ள இந்த 12.5 சதவீத கூடுதல் வரி விதிப்பு பரிந்துரை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதுதொடா்பாக வரும் ஜூலை 6 வரை பெறப்படும் பல்வேறு தரப்பினரின் கருத்துகள் மற்றும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்ட பிறகே இறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.