இந்தியாவிலிருந்து மாம்பழ இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள்: நேபாளம்
இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் மாம்பழங்களில் அதிக அளவிலான பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுவதாக நேபாளம் குற்றச்சாட்டு
காத்மாண்டு : நேபாளத்தில் இந்தியாவிலிருந்து மாம்பழங்களை இறக்குமதி செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் மாம்பழங்களில் அதிக அளவிலான பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டு விளைவிக்கப்பட்டிருப்பதாக இந்தியாவில் விளைவிக்கப்படும் மாம்பழங்கள் மீது தர ரீதியான குற்றச்சாட்டு நேபாளத்தால் சுமத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்திய மாம்பழங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் எதிரொலியாக, இந்திய உள்ளூர் சந்தைகளில் மாம்பழ வரத்து அதிகரித்திருப்பதாக வணிகர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், நேபாள அரசின் இந்த நடவடிக்கையானது அந்நாட்டில் விவசாயிகளிடையே மாம்பழ உற்பத்தியை ஊக்குவிக்கும் யுக்தியாக பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். எனினும், நேபாளத்துக்கான மாம்பழ இறக்குமதியை இந்தக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கும் என்பதால், அந்நாட்டில் மாம்பழச் சாறு தயாரிப்பு ஆலைகளை நடத்தும் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement