என்எல்சி இந்தியா பங்கு வெளியீடு: பங்குகள் வேண்டி 5 மடங்கு அதிக விண்ணப்பம்!
என்.எல்.சி இந்தியா 3 சதவீதம் வரையிலான பங்குகளை விற்பனை செய்வதற்கான மத்திய அரசின் திட்டத்தின் முதல் நாளிலேயே ரூ. 4,158 கோடி அளவுக்கு அதிகமான விண்ணப்பங்கள் பதிவானது.
புதுதில்லி: என்.எல்.சி இந்தியா 3 சதவீதம் வரையிலான பங்குகளை விற்பனை செய்வதற்கான மத்திய அரசின் திட்டத்தின் முதல் நாளிலேயே ரூ. 4,158 கோடி அளவுக்கு அதிகமான விண்ணப்பங்கள் பதிவானதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சில்லறை முதலீட்டாளர் அல்லாதவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 2.49 கோடிப் பங்குகள் என்ற அடிப்படை அளவை விட அதிகமாக, 13.03 கோடிக்கும் அதிகமான பங்குகளுக்கு அவர்கள் விருப்பம் கோரினர். இதற்கான விலை பங்கு ஒன்றுக்கு ரூ. 319.06 ஆக இருந்தது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த 'ஆஃபர் ஃபார் சேல்' மூலம், என்எல்சி இந்தியா சுமார் 4.16 கோடிப் பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. பங்கு ஒன்றுக்கு ரூ. 303 என்ற குறைந்தபட்ச விலையில் விற்பனை செய்ய முன்வந்துள்ளது. இந்தநிலையில், குறைந்தபட்ச விலையின் அடிப்படையில் மத்திய அரசுக்கு சுமார் ரூ. 1,200 கோடி வருவாய் கிடைக்கும். இந்தக் குறைந்தபட்ச விலையானது, மும்பை பங்குச் சந்தையில், என்.எல்.சி இந்தியா பங்கின் இறுதி விலையான ரூ. 335.65-ஐ விட இது 9.73 சதவீதம் குறைவானதாகும்.
Advertisement
Advertisement
மும்பை பங்குச் சந்தையில் என்.எல்.சி இந்தியா பங்குகள் முந்தைய நாள் இறுதி விலையை விட 2.32 சதவீதம் சரிந்து, ரூ. 327.85 ஆக வர்த்தகம் நிறைவடைந்தது.
தற்போதிய நிலையில், என்எல்சி இந்தியாவில் 72.20% பங்குகளைக் கொண்டுள்ளது மத்திய அரசு.