19.11.1994: ஐஸ்வர்யா ராய் உலக அழகியான தினம் இன்று!
இந்தியாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய் 1994-ஆம் ஆண்டு இதே நாளில்தான் உலக அழகியாகத் தேர்தெடுக்கப்பட்டார்.
இந்தியாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய் 1994-ஆம் ஆண்டு இதே நாளில்தான் உலக அழகியாகத் தேர்தெடுக்கப்பட்டார்.
தென் ஆப்பிரிக்காவின் , சன் சிட்டி என்னும் நகரில் நடந்த போட்டியில், அவர் 86 நாடுகளைச் சேர்ந்த அழகிகளைத் தோற்கடித்து இந்த பட்டத்தை வென்றார்.
அதே போட்டியில் அவர் சிறந்த புகைப்பட முகவெட்டு தோற்றம் கொண்டவர் என்ற விருதையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஸ்வர்யா ராய் கர்நாடகவில் உள்ள மங்களூர் நகரில் 01.11.1973 அன்று பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணராஜ் கடல் உயிரியலார், அம்மா இல்லத்தரசி. மூத்த சகோதரர் ஆதித்யா ராய் வணிக கடற்படை பொறியாளர் ஆவார்.