பத்தாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 1
அழகிய குயில்கள்
பாடல் 1
வேய் மரு தோள் இணை மெலியுமாலோ,
மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்கா
காமரு குயில்களும் கூவுமாலோ,
கண மயில் அவை கலந்து ஆலுமாலோ,
ஆ மருவின நிரை மேய்க்க நீ போக்கு
ஒரு பகல் ஆயிரம் ஊழியாலோ, தாமரைக்
கண்கள் கொண்டு ஈர்தியாலோ,
தகவு இலை, தகவு இலையே நீ கண்ணா.
கண்ணா, உன்னைப் பிரிந்து என்னுடைய மூங்கில்போன்ற தோள்கள் இரண்டும் மெலிகின்றன, என்னுடைய மெலிவையும் தனிமையையும் பார்க்காமல் அழகிய குயில்கள் கூவுகின்றன, மயில் கூட்டங்கள் கலந்து ஆடுகின்றன, பசுக்கூட்டங்களை மேய்ப்பதற்காக நீ செல்கிறாய், நீ திரும்பிவரும்வரை நான் ஏங்கிக் காத்திருக்கிறேன், ஒரு பகல் எனக்கு ஆயிரம் ஊழிக்காலங்களைப்போல் தோன்றுகிறது, தாமரைபோன்ற திருக்கண்களால் என்னைத் துன்புறுத்துகிறவனே, இது நியாயமில்லை, நியாயமில்லை.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.