முகப்பு
தினமணி கதிர்

பேல் பூரி

Updated On : 14 மே 2023, 12:00 am IST
பகிர்:

கண்டது
(திருச்சி ஜங்ஷனில் ஆட்டோ ஒன்றில் காணப்பட்ட வாசகம்)
"100'-க்கு மேல் போனால் "108' தொடரும்.
-சம்பத்குமாரி, பொன்மலை.

(கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சில ஊர்கள்)
"சின்ன விழை'', "பெரிய விழை'', "சின்னபெரும் செல்வ விழை'',  "சின்ன அணைந்தான் விழை''.
-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

(ராமநாதபுரம் அருகேயுள்ள ஓர் கிராமம்)
"இல்லுமுள்ளி''
-இலக்கியவாணி, பாளையங்கோட்டை.

Advertisement

Advertisement


கேட்டது
(விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இரு முதியவர்கள் பேசியது)
"சார்.  நான் ஊருக்குப் புதுசு. முதியோர் இல்லத்துக்கு எப்படி போகணும்?''
"உங்க சொத்தையெல்லாம் பிள்ளைங்களுக்கு எழுதி வைச்சிட்டால் போதும். அவங்களே கொண்டு போய் விடுவாங்க?''
-கே.இந்து குமரப்பன், விழுப்புரம்.

(திருநெல்வேலியில் பிரபல ஜவுளி நிறுவன வாசலில் இரு பெண்கள் பேசிக் கொண்டது)
"இங்க புடவை வாங்கினேன். எனக்கு சமையல் குறிப்பு தருவாங்கன்னு பார்த்தேன்.  தரவில்லை.''
" யாருக்கு கொடுத்தாங்க?''
"என் வீட்டுக்காரர்தான் சமையல் செய்வாருன்னு எப்படி கண்டுபிடிச்சாங்களோ? அவருக்கு கொடுத்துட்டாங்க?''
 

-ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.
(பல்லாவரம் கண்டோன்மென்ட் பூங்காவில் இரு சிறுவர்கள்)
"எங்க பாட்டி ஆர்கானிக் லிப்ஸ்டிக் போடுவாங்கடா?''
"என்னடா சொல்றே?''
"வெற்றிலை பாக்கு போடுவாங்கடா?''
-நெ.இராமகிருஷ்ணன், சென்னை.


யோசிக்கிறாங்கப்பா!
ஆற்று நீர், ஊற்றுநீர், உபரிநீர்-இதுதான் கடல்நீர்.
செண்ணீர், கண்ணீர், கழிவுநீர்-இதுதான் உடல்.
-ஜா.தேவதாஸ், தஞ்சாவூர்


எஸ்எம்எஸ்
அவசர வேலை 
இரட்டிப்பு வேலையாகிவிடும்.
-மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments