கற்பூரவல்லித் தொக்கு 
தினமணி கதிர்

கற்பூரவல்லித் தொக்கு

கவிதா சரவணன்

தேவையானவை:

கற்பூரவல்லி இலை - 20 (மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்)

புளிக்கரைசல் - கால் கிண்ணம்

மிளகுத்தூள், சீரகத்தூள், ஓமப்பொடி - தலா ஒரு தேக்கரண்டி

சீரகம் - கால் தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து சீரகம் தாளித்து, அரைத்த கற்பூரவல்லி சேர்த்து வதக்கி, புளிக்கரைசல், மிளகுத்தூள், சீரகத்தூள், ஓமப்பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும்.

வற்றியதும் இறக்கி வைக்கவும். இதை பிரெட், சப்பாத்தி, தோசையில் தடவி ரோல் செய்து கொடுக்க, பிள்ளைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். சூடான சாதத்தில் நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம். அடிக்கடி சளி, தலைபாரம், சைனஸ் தொந்தரவால் பாதிக்கப்படுபவர்கள், வாரம் இருமுறை இதைச் சாப்பிட்டு வர, நல்ல தீர்வு கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிஞர் அண்ணா, எம்ஜிஆர் நினைவிடத்தில் செங்கோட்டையன் மரியாதை! | TVK

சிங்கம்புணரி பத்ரகாளியம்மன் கோயிலில் குடமுழுக்கு

விவசாயிகள், வணிகா்களுக்கான விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

நெற்குப்பை நூலகத்துக்கு மாநில அளவிலான விருது

தெய்விகம் பெண்மை... சாஹிதி தாசரி!

SCROLL FOR NEXT