இதமான சூழலைத் தரும் இலவம் மரங்கள்!
மணிப்பூரில் பல இடங்களில் உள்ள 'பாம்பாக்ஸ் சீபா' எனப்படும் இலவ மரங்கள் பிரகாசமான சிவப்புப் பூக்களைக் கொண்டதோடு, உயரமாகவும் இருக்கும்.
மணிப்பூரில் பல இடங்களில் உள்ள 'பாம்பாக்ஸ் சீபா' எனப்படும் இலவ மரங்கள் பிரகாசமான சிவப்புப் பூக்களைக் கொண்டதோடு, உயரமாகவும் இருக்கும். இவை கோடைக் காலத்தில் பனியைப் போன்று, காற்றில் மிதக்கும் மென்மையான வெள்ளை விதைகளை வெளியிடுகின்றன. இவற்றால் பள்ளத்தாக்குகளில் காற்றுக்கே உயிர் வருவது போன்ற தருணம் உண்டு.
தெருக்கள், வயல்வெளிகள், ஆற்றின் கரைகளில் வானத்தில் வென்மையான இழைகளாக நிரம்புகின்றன. பூக்கள் வாடியதும் அவை நீண்ட காய்களை விட்டுச் செல்கின்றன. இந்தக் காய்கள் பல வாரங்கள் கிளையிலேயே தங்கி, வெயிலில் மெதுவாக உதிர்கின்றன. அந்தக் காய்கள் பிளக்கத் தொடங்கும் வரை ஒன்றும் தெரியாது.
ஒவ்வொரு காய்க்குள்ளும் மெல்லிய வெளிறிய நார்களால் சுற்றப்பட்ட விதைகள் உள்ளன. வறண்ட காலம் வரும்போது காய்கள் தாமாகவே வெடித்து திறக்கின்றன. அந்தத் தருணத்தில் அந்த நார்கள் விதைகளையும் தம்மோடு சுமந்து கொண்டு காற்றில் சிதறுகின்றன.
Advertisement
Advertisement
கடந்து செல்லும் ஒரு மெல்லிய தென்றலே அவற்றை மேலே தூக்குவதற்குப் போதுமானது. சில நிமிடங்களிலேயே மரத்தைச் சுற்றியுள்ள இடம், மிதக்கும் வெள்ளைக் கொத்துகளால் நிரம்பி விடுகிறது. அவை நேராக தரையில் விழாமல், காற்றின் திசை மாற்றத்தின்படி திரும்பி நகர்ந்து மேலே மிதக்கின்றன.
சில மரங்கள் அருகில் உள்ள மண்ணில் நிலை பெறுவதற்கு முன் ஒரு குறுகிய தூரம் மட்டுமே பயணிக்கின்றன. மற்றவை வயல்களையும் நீர்நிலைகளையும் கடந்து மரங்கள் புதிதாக வளரக்கூடிய இடங்களில் விழுகின்றன.
புதிய இடங்களில் மரம் மீண்டும் வளர இயற்கை உதவுகிறது. குழந்தைகள் அவற்றைப் பிடிக்க முயலுகின்றன. விவசாயிகள் இதனை ஒரு சுழற்சியாக நினைக்கின்றனர்.
ராஜி ராதா, பெங்களூரு.