ஞாயிறு கொண்டாட்டம்

யார் விட்டுக்கொடுப்பது? 

வேதாத்திரி மகரிஷி சொற்பொழிவு ஒன்றில் இல்லற வாழ்க்கையில் கணவன் மனைவி உறவின் சிறப்பைப் பற்றி பல உதாரணங்களுடன் பேசினார்.

DIN

வேதாத்திரி மகரிஷி சொற்பொழிவு ஒன்றில் இல்லற வாழ்க்கையில் கணவன் மனைவி உறவின் சிறப்பைப் பற்றி பல உதாரணங்களுடன் பேசினார். இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய விட்டுக் கொடுப்பது அனுசரித்துப் போவது, பொறுத்துப் போவது ஆகிய மூன்று பண்புகளைப் பின்பற்ற வேண்டும் என்றார். அப்போது ஒரு பெண் எழுந்து "விட்டுக் கொடுப்பது என்று பொதுவாகத்தான் சொல்கிறீர்கள். யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா? பிரச்னை அங்குதான் ஆரம்பிக்கிறது' என்றார்.

அதற்கு வேதாத்திரி மகரிஷி "யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ? யார் அறிவாளியோ? அவர்கள் தான் விட்டுக் கொடுப்பார்கள். அவர்கள் தான் அனுசரித்து போவர்கள். அவர்கள் தான் பொறுத்துப் போவார்கள். இனி உங்கள் வீட்டில் யார் விட்டுக் கொடுத்துப் போவது என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்' என்றார்.

"உங்கள் அறிவுரை அமுதானது' என்று மகிழ்ச்சி பொங்க கூறினார் அந்த பெண்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT