28 சீன சுற்றுலா பயணிகளுடன் சென்ற படகு மாயம்: மலேசிய அதிகாரிகள் அறிவிப்பு!
சீன சுற்றுலா பயணிகள் 28 பேருடன் மலேசியாவில் பயணம் செய்த சுற்றுலா படகு ஒன்று திடீரென மாயமானதாக அரசுத் தரப்பு வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கோலாலம்பூர்: சீன சுற்றுலா பயணிகள் 28 பேருடன் மலேசியாவில் பயணம் செய்த சுற்றுலா படகு ஒன்று திடீரென மாயமானதாக அரசுத் தரப்பு வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
சீனாவில் இருந்து மலேசியாவுக்கு 28 சீனர்கள் சுற்றுலா சென்றனர் .அவர்கள் கிழக்கு சபா மாகாணத்தில் உள்ள போர்னியோ தீவுக்கு படகில் புறப்பட்டு சென்றனர். கோட்டா கினாபாலு என்ற இடத்தின் அருகே சென்ற போது மேலும் 3 உள்நாட்டினர் அந்த படகில் ஏறியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.திடீரென அந்தப் படகு மாயமானது என அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது படகை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். நேற்று தட்பவெப்பநிலை மோசமாக இருந்தது. எனவே படகு விபத்தில் எதிலும் சிக்கி கடலில் மூழ்கியிருக்கலாம் என்ற அச்சமம் நிலவுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.