பிரதமர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார் ட்ரூடோ
கனடாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பிரதமர் தேர்தலில், அந்த நாட்டின் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
கனடாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பிரதமர் தேர்தலில், அந்த நாட்டின் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
அவரது தலைமையிலான லிபரல் கட்சி, வரும் தேர்தலில் மான்ட்ரியல் மாகாணத்தில் பப்பினியா தொகுதி வேட்பாளராக அவரை அறிவித்துள்ளது. இந்தத் தொகுதியில்தான் அவர் 2008, 2011, 2015-ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றுள்ளார்.
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் அரசியல் சூழலிலும், நேர்மறையான சிந்தனையுடன் மக்களை ஒருங்கிணைத்து நாட்டை வளப்படுத்த உறுதிபூண்டுள்ளதால், பிரதமர் பதவிக்கு மீண்டும் போட்டியிட விரும்புவதாக ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.