FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ரயில் இணைப்பு: வட - தென் கொரியா பேச்சுவார்த்தை

வட மற்றும் தென் கொரியா நாடுகளிடையே ரயில் இணைப்பை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையை இரு நாட்டு அதிகாரிகளும் எல்லை கிராமமான பான்முன்ஜோமில் செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனர்.

Updated On : 27 ஜூன் 2018, 1:05 am IST
பகிர்:

வட மற்றும் தென் கொரியா நாடுகளிடையே ரயில் இணைப்பை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையை இரு நாட்டு அதிகாரிகளும் எல்லை கிராமமான பான்முன்ஜோமில் செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையே தற்போது இணக்கம் அதிகரித்துள்ள நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே, கொரியப் போருக்கு முன்னர், ஜப்பான் ஆக்கிரமிப்பில் இருந்தபோது இரு கொரிய நாடுகளுக்கும் இடையே இருப்புப் பாதை போடப்பட்டுள்ளது.
எனினும், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போடப்பட்ட அந்தப் பாதையை புனரமைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து தற்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments