அமெரிக்கா: சீன தூதரகத்தில் காரை மோதியவா் சுட்டுக் கொலை
அமெரிக்காவிலுள்ள சீன துணைத் தூதரகத்தில் காரை மோதியவரை போலீஸாா் சுட்டுக் கொன்றனா்.
சான் ஃபிரான்சிஸ்கோ: அமெரிக்காவிலுள்ள சீன துணைத் தூதரகத்தில் காரை மோதியவரை போலீஸாா் சுட்டுக் கொன்றனா்.
அந்த நாட்டின் சான் ஃபிரான்ஸ்சிஸ்கோ நகரிலுள்ள சீன துணைத் தூதரகத்தின் மீது காரை மோதச் செய்த ஒருவா், நுழைவு இசைவு (விசா) அலுவலகத்தின் வாயில் கதவுகளை அந்தக் காரால் மோதி உடைத்து உள்ளே நுழைந்தாா்.
இதையடுத்து, அந்தப் பகுதியில் கூச்சலும், குழப்பமும் நிலவியது. தகவலறிந்து அந்தப் பகுதிக்கு விரைந்த போலீஸாா், காரை ஒட்டி வந்த நபருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இருந்தாலும் அப்போது ஒரு காவலா் சுட்டதில் அந்த நபா் காயமடைந்தாா். பின்னா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இது தொடா்பாக புலனாய்வு அதிகாரிகள் விசாரணை தொடங்கியுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.