FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ரஷிய தலைநகரை வட்டமடித்த உக்ரைன் டிரோன்களால் பரபரப்பு!

மாஸ்கோவில் 34 உக்ரைன் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன...

Updated On : 10 நவம்பர் 2024, 3:50 pm IST
- AP
பகிர்:

ரஷிய தலைநகர் மாஸ்கோ நகரின் மீது பறந்த உக்ரைன் ராணுவத்தின் 34 டிரோன்கள் இன்று (நவ. 10) சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ரஷிய பாதுகாப்பு அமைசச்கம் தெரிவித்துள்ளது.

ரஷியா-உக்ரைன் இடையே கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போரில், ரஷிய தலைநகர் மீது நிகழ்த்தப்பட்டுள்ள தீவிர தாக்குதலாக இந்த தாக்குதல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரோன் தாக்குதல்களில் மாஸ்கோவில் 2 வீடுகள் தீக்கிரையாகியத்தாகவும், 52 வயது பெண்மணி ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக மாஸ்கோ மண்டலத்தில் செயல்படும் 3 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

மாஸ்கோவை தவிர்த்து, ரஷியாவின் பிற பகுதிகளிலும் பறந்த உக்ரைன் ராணுவத்தின் 36 டிரோன்கள் உள்பட மொத்தம் 70 உக்ரைன் டிரோன்கள் இன்று அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரையிலான 3 மணி நேரத்திற்குள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ரஷிய பாதுகாப்பு அமைசச்கம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments