FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

பள்ளிப் பேருந்தில் பற்றிய தீ : 25 மாணவர்கள் பலியாகியிருக்கலாம் என அச்சம்!

பாங்காக்கில் நேரிட்ட பள்ளிப் பேருந்து தீ விபத்தில் 25 மாணவர்கள் பலியாகியிருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.

Updated On : 1 அக்டோபர் 2024, 4:18 pm IST
பகிர்:

பாங்காக்: தாய்லாந்து நாட்டில், பாங்காக் நகரில், ஆசிரியர்கள் மற்றும் இளம் மாணவர்களுடன் சென்றுகொண்டிருந்த பேருந்தில் திடீரென தீப்பற்றியதில், அதிலிருந்த 25 மாணவர்கள் பலியாகியிருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.

பேருந்தில் திடீரென பயங்கர தீ பரவிய நிலையில், அதிலிருந்த 25 பேரும் பலியாகியிருக்கலாம் என்று அதிகாரிகளும், மீட்புக் குழுவினரும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மத்திய உத்தை தானியிலிருந்து பாங்காக் நோக்கி பள்ளிப் பேருந்து சுற்றுலா சென்று கொண்டிருந்ததாகவும், இதில் 44 பேர் இருந்ததாகவும், பதும் தானே மாகாணத்தில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென பேருந்தில் தீ பற்றி எரிந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் எத்தனை பேர் இறந்திருக்கக் கூடும் என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை. 25 மாணவர்கள் வரை இறந்திருக்கலாம் என்று மீட்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

Advertisement

Advertisement

சம்பவ இடத்திலிருந்து மீட்புப் பணிகளை பல துறை அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு வருகிறார்கள். பேருந்து தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியும் விடியோக்கள் இணையதளங்களில் பரவி வருகிறது.

பேருந்தில் பயணித்த மாணவர்களின் வயது மற்றும் அடையாளங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

பேருந்தின் டயர் வெடித்ததில், தீ விபத்து நேரிட்டதாகவும் கூறப்படுகிறது. மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள், அந்த பேருந்திலிருந்து குறைந்தது 10 பேரின் உடல்களை மீட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments