ஏர் சீனா விமானத்தின் கேபினில் திடீர் தீ விபத்து
நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது ஏர் சீனா விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் பீதியடைந்தனர்.
நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது ஏர் சீனா விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் பீதியடைந்தனர்.
சீனாவின் ஹாங்சோவிலிருந்து தென் கொரியாவின் சியோலுக்கு சனிக்கிழமை புறப்பட்ட ஏர் சீனா விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது. விமானத்தின் கைபைகள் வைக்கும் கேபினில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
பயணி ஒருவரின் பையில் இருந்த லித்தியம் பேட்டரியால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
Advertisement
Advertisement
பாக். - ஆப்கன் மோதலுக்கு முடிவு: சண்டை நிறுத்தம் உடனடியாக அமல்!
உடனே விமானம், ஷாங்காயில் உள்ள புடாங் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தற்போது இந்த சம்பவத்தின் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தீ விபத்து காரணமாக விமானத்தில் பயணம் மேற்கொண்ட பயணிகள் மத்தியில் ஒருவித பீதி காணப்பட்டது.
The plane diverted to Shanghai Pudong International Airport after a passenger's lithium battery, stored in the overhead compartment, unexpectedly caught fire.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.