கெய்ரோ : சூடானில் வாகனங்கள் மீது ட்ரோன்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதல்களில் 8 குழந்தைகள் உள்பட 24 பேர் கொல்லப்பட்டனர். மத்திய சூடானின் வடக்கு கோர்டோஃபேன் மாகாணத்தில் ரஹாத் நகரையொட்டி, துணை ராணுவப்படையின் கிளர்ச்சியாளர் பிரிவால் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சூடானில் நீடிக்கும் உள்நாட்டுச் சண்டை காரணமாக, இடம்பெயர்ந்து சென்ற மக்களைக் குறிவைத்து சனிக்கிழமை(பிப். 7) தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், வாகனங்கள் மீதான தாக்குதல்களில் 2 கைக்குழந்தைகளுடன் சேர்த்து மொத்தம் 8 குழந்தைகள் உள்பட 24 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதல்களில் பலர் காயமடைந்த நிலையில், அவர்கள் ரஹாத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சூடானில் அப்பாவி மக்கள் மீதான கொடுஞ்செயல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் சூடானிய மருத்துவர்கள் வளையம், அங்குள்ள மக்களைக் காக்க சர்வதேச சமூகமும் மனித உரிமைகள் அமைப்புகளும் உடனடி நடவடிக்கைகளில் ஈடுபட வலியுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.