முகப்பு
உலகம்

உக்ரைனுக்கு விரைவில் நல்ல செய்தி! ஸெலென்ஸ்கி - அமெரிக்க அமைச்சர் சந்திப்பின் பின்னணி

உக்ரைனில் போர் நிறுத்தம்: டிரம்ப் உறுதி! ஸெலென்ஸ்கி - அமெரிக்க அமைச்சர் சந்திப்பின் பின்னணி

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 6:54 AM
உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கியும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவும் சந்திப்பு - Secretary Marco Rubio @SecRubio
பகிர்:

முனிச் : ஜெர்மனியில் நடைபெறும் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கியும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவும் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்தச் சந்திப்பு குறித்து தமது எக்ஸ் தளப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை(பிப். 15) பதிவிட்டுள்ள ரூபியோ, உக்ரைனின் தேசப் பாதுகாப்பு குறித்தும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு துறைகளில் பங்களிப்பை வலுப்படுத்துவது குறித்தும் uக்ரைன் அதிபருடன் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். ரத்தம் சிந்தப்படுவது தடுத்து நிறுத்தப்படுவதற்கு ஒரு தீர்வு ஏற்படுத்துவதில் அதிபர் டிரம்ப் முனைப்புடன் இருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமெரிக்கா முன்னெடுத்துள்ள மத்தியஸ்த பேச்சுவார்த்தை ஜெனீவாவில் பிப். 17 - 18 நடைபெற உள்ளது. அதில், உக்ரைன், ரஷியா மற்றும் அமெரிக்கா பங்கேற்கும். இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையின் முடிவில், உக்ரைன் விவகாரத்தில் முக்கிய முடிவுகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

summary

US Secretary of State Marco Rubio meets Ukrainian President Volodymyr Zelenskyy at Munich Security Conference

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.