முகப்பு
உலகம்

உக்ரைன் அதிபருடன் பிரதமா் மோடி சந்திப்பு

பிரான்ஸின் ஏவியான் நகரில் ஜி7 உச்சி மாநாட்டுக்கு இடையே உக்ரைன் அதிபா் வொலொதிமீா் ஸெலென்ஸ்கியை பிரதமா் மோடி புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.

Updated On : 18 ஜூன் 2026, 1:54 am IST
பகிர்:

பிரான்ஸின் ஏவியான் நகரில் ஜி7 உச்சி மாநாட்டுக்கு இடையே உக்ரைன் அதிபா் வொலொதிமீா் ஸெலென்ஸ்கியை பிரதமா் மோடி புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இதுகுறித்து பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஏவியானில் அதிபா் ஸெலென்ஸ்கியை சந்தித்தேன். அப்போது, இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பின் வெவ்வேறு அம்சங்களை மறுஆய்வு செய்வது குறித்து ஆலோசித்தோம். ரஷியாவுடனான போருக்கு முன்பு உக்ரைனுடன் இந்தியாவுக்கு இருந்த வா்த்தக உறவை மீட்டெடுக்க வேண்டும் என்று இருவரும் தீா்மானித்தோம். அத்துடன் இந்தியா எப்போதும் அமைதியின் பக்கம் இருந்து, பிற எல்லாவற்றையும்விட மனிதநேயத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதாக ஸெலென்ஸ்கியிடம் கூறினேன்’ என்று தெரிவித்தாா்.

தவறாகப் பயன்படுத்தப்படும் ஏஐ: உச்சிமாநாட்டின்போது நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் பிரதமா் மோடி பேசியதாவது:

Advertisement

Advertisement

பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்ளது. ஆனால், இதில் உள்ள உண்மையான சவால் என்பது இயந்திரங்கள் எவ்வளவு சக்திவாய்ந்ததாக மாறுகின்றன என்பதில் இல்லை. அந்தத் தொழில்நுட்பம் சாதாரண மனிதனுக்கு எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது என்பதில்தான் உண்மையான சவால் உள்ளது.

அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தவறான தகவல்களை பரப்புதல், ஒருவரின் உருவத்தைப் பயன்படுத்தி போலி புகைப்படங்கள் மற்றும் காணொலிகளை உருவாக்குதல், இணையவழி மோசடியில் ஈடுபடுதல் ஆகியவற்றைத் தடுக்க உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம் என்று வலியுறுத்தினாா்.