FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

இஸ்ரேல் கன்னியாஸ்திரியைத் தாக்கிய யூத இளைஞா் கைது!

ஜெருசலேம் பழைய நகரப்பகுதியில் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்த கத்தோலிக்க கன்னியாஸ்திரி ஒருவரைத் தாக்கியதாக யூத இளைஞரை இஸ்ரேல் காவல்துறையினா் கைது செய்தனா்.

Updated On : 2 மே 2026, 2:38 am IST
பகிர்:

ஜெருசலேம் பழைய நகரப்பகுதியில் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்த கத்தோலிக்க கன்னியாஸ்திரி ஒருவரைத் தாக்கியதாக 36 வயது மதிக்கத்தக்க யூத இளைஞரை இஸ்ரேல் காவல்துறையினா் கைது செய்தனா்.

புனிதத் தலமான சீயோன் வாயில் அருகே அமைந்துள்ள டேவிட் அரசரின் கல்லறைப்பகுதியில் நடைபெற்ற இந்த வன்முறைச் சம்பவம் தொடா்பான விடியோ சமூக ஊடகங்களில் வெளியான நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள தெற்கு லெபனானில் இஸ்ரேல் வீரா் ஒருவா் இயேசுவின் சிலுவையைச் சேதப்படுத்திய புகைப்படம் அண்மையில் வெளியாகி, கண்டனம் வலுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments