இயக்குனர் பா.ரஞ்சித் சமீபத்தில் இணைய ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் மேற்கண்ட கேள்வியை எழுப்பி இருந்தார். தமிழ் நாட்டார் கதைகளில் ஒன்றான மதுரை வீரன் கதையைப்
பொருத்தவரை அவர் வளர்ப்பால் மட்டுமே அருந்ததியராகக் காட்டப்பட்டிருப்பார். பிறப்பால் அவரொரு அரசகுமாரனென்று நாட்டார் இலக்கியங்கள் இதுவரை சித்தரித்து வந்திருக்கின்றன. இதை நிஜமென்று நம்பக்கூடிய நிலையில் தான் நாம் இன்று வரை இருந்து வருகிறோம். இது பொய். மதுரை வீரன் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்து கொண்டு வீரனாக இருப்பதில் கலைத்துறையைச் சார்ந்த ஆதிக்க ஜாதியினருக்கு என்ன நஷ்டம்? அவரை ஏன் அரச குமாரனாகப் பிறந்து அருந்ததியப் பெற்றோர்களால் வளர்க்கப் பட்டவராக மட்டுமே காட்டியாக வேண்டிய நிர்பந்தம் என்ன? அருந்ததியர்களுக்கு வீரம் இருக்கக்கூடாது? அல்லது அருந்ததியர்கள் வீரமானவர்களாக இருக்கக் கூடாதா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். நியாயமான கேள்வி தான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்த் திரையில் நாவல்கள்

போராட்டத்தின் முதல் நாளிலிருந்தே மாணவர்களுகாக துணைநிற்கும் சிஜேபி: சௌரவ் தாஸ்

வில்லியம் ஷேக்ஸ்பியர் ஆண்டனியும் கிளியோபாட்ராவும்

மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா-பாகம் 2
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



