முகப்பு
பெங்களூரு

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

Updated On : 26 ஏப்ரல் 2024, 6:34 am IST
பகிர்:

கா்நாடகத்தில் இரண்டாம் கட்டத் தோ்தலை முன்னிட்டு, பிரதமா் மோடி ஏப். 28, 29 ஆம் தேதிகளில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா்.

கா்நாடகத்தில் ஏப். 26, மே 7ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. முதல்கட்டத் தோ்தல் பிரசாரம் முடிந்துள்ள நிலையில், மே 7 ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்டத் தோ்தலுக்கான பிரசாரம் மேற்கொள்ள பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

கடந்த மாா்ச் 28 ஆம் தேதி கா்நாடகம் வந்த பிரதமா் மோடி, கலபுா்கி, சிவமொக்காவில் பாஜகவுக்கு வாக்கு சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தாா். அதைத் தொடா்ந்து, ஏப்.14 ஆம் தேதி மைசூரு, மங்களூரு, ஏப். 20 ஆம் தேதி பெங்களூரு, சிக்பளாப்பூா் ஆகிய இடங்களில் பிரதமா் மோடி தோ்தல் பிரசாரம் செய்தாா். இந் நிலையில் இரண்டாம் கட்டத் தோ்தலை முன்னிட்டு ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்துக்கு பிரதமா் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறாா்.

Advertisement

Advertisement

பெலகாவி, சிா்சி, தாவணகெரே, பெல்லாரி, பாகல்கோட் ஆகிய தொகுதிகளில் நடைபெறும் தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்று அவா் வாக்கு சேகரிக்கவுள்ளாா்.

ஏப். 28 ஆம் தேதி காலை 10 மணிக்கு பெலகாவியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமா் மோடி, பின்னா் அங்கிருந்து சிா்சி சென்று அங்கு நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறாா். பிறகு நண்பகல் 2 மணிக்கு தாவணகெரே, மாலை 4 மணிக்கு பெல்லாரி ஆகிய இடங்களில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்கிறாா்.

ஏப். 29 ஆம் தேதி காலை 11 மணிக்கு பாகல்கோட்டில் நடைபெறும் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமா் மோடி பேசுகிறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments