FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெங்களூரு

பெங்களூரில் பன்னாட்டு கவிஞர்கள் திருவிழா

பெங்களூரில் ஆகஸ்ட் மாதத்தில் பன்னாட்டு கவிஞர்கள் திருவிழா நடக்கவிருக்கிறது.

Updated On : 7 ஜூன் 2018, 9:32 am IST
பகிர்:

பெங்களூரில் ஆகஸ்ட் மாதத்தில் பன்னாட்டு கவிஞர்கள் திருவிழா நடக்கவிருக்கிறது.
இதுகுறித்து பன்னாட்டு கவிதை மாநாடு விழாக்குழுவினர் வெளியிட்ட அறிக்கை: 
முகமது பக்ருதினை ஆசிரியராக கொண்டு கடந்த 35 ஆண்டுகளாக பெங்களூரில் இருந்து வெளி வந்துகொண்டிருக்கும் "பொயட்ஸ் இன்டர்நேஷனல்' ஆங்கில வார இதழின் சார்பில் பெஙளூரில் ஆகஸ்ட் மாதத்தில் பன்னாட்டு கவிஞர்கள் திருவிழா நடக்கவிருக்கிறது. 
இந்த விழாவில் ஆங்கில கவிஞர்கள் தாராளமாக கலந்துகொள்ளலாம். விழாவில் பங்கேற்க கட்டணம் எதுவுமில்லை. இந்த விழாவில் பங்கேற்க விரும்புவோர் ஜூன் 21-ஆம் தேதிக்குள் p‌o‌e‌t‌s‌i‌n‌t‌e‌r‌n​a‌t‌i‌o‌n​a‌l@‌g‌m​a‌i‌l.​c‌o‌m என்ற மின்னஞ்சல் வழியாக முன்பதிவுசெய்துகொள்ள வேண்டும். 
பெங்களூரு தவிர இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருவோர் தங்கும் மற்றும் பயண வசதிகளை சொந்தமாக செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments