"பட்டயக் கணக்கு பயின்றவர்களுக்கு சர்வதேச அளவில் வரவேற்பு'
பட்டயக் கணக்கு பயின்றவர்களுக்கு சர்வதேச அளவில் வரவேற்புள்ளது என பட்டயக் கணக்காளர் பட்டம் பெற்ற சங்கத்தின் சர்வதேச வளர்ச்சிப் பிரிவின் தலைவர் சாஜித்கான் தெரிவித்தார்.
பட்டயக் கணக்கு பயின்றவர்களுக்கு சர்வதேச அளவில் வரவேற்புள்ளது என பட்டயக் கணக்காளர் பட்டம் பெற்ற சங்கத்தின் சர்வதேச வளர்ச்சிப் பிரிவின் தலைவர் சாஜித்கான் தெரிவித்தார்.
பெங்களூரில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சர்வதேச அளவில் பட்டயம் பயின்ற மாணவர்களுக்கு அதிகளவில் வரவேற்பு உள்ளது. ஆனால், பட்டயக் கணக்காளர் பட்டயப் படிப்பை படிப்பதற்கு மாணவர்கள் அதிகளவில் சிரமப்படுவதாக எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது.
எனவே, பட்டயக் கணக்காளர் பட்டப் படிப்புக்கு தேவையான கல்வி உதவியை வழங்க பட்டயக் கணக்காளர் பட்டம் பெற்ற சங்கம் முடிவு செய்துள்ளது. திறமை மிகுந்த மாணவர்களுக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளோம். மாணவர்கள் சர்வதேச அளவில் சென்று பணியாற்றுவதற்கு தேவையான கல்வியை வழங்க திட்டமிட்டுள்ளோம். 1904-ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் தொடங்கப்பட்ட எங்கள் சங்கம், தற்போது 57 நாடுகளில் 2 லட்சம் உறுப்பினர்களை கொண்டுள்ளது என்றார் அவர். பேட்டியின் போது, அச்சங்கத்தின் இயக்குநர் லுசியா ரியல்மார்டின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.