FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெங்களூரு

மாநில கட்சிகளை மக்கள் புறக்கணிப்பர்

காங்கிரஸை போல மாநிலக் கட்சிகளையும் மக்கள் புறக்கணிப்பர் என கர்நாடக பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.

Updated On : 25 மே 2018, 2:48 am IST
பகிர்:

காங்கிரஸை போல மாநிலக் கட்சிகளையும் மக்கள் புறக்கணிப்பர் என கர்நாடக பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.
இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்றுள்ள குமாரசாமி, அஸ்வமேதயாக குதிரை போல தேசிய அளவில் ஓடி வந்த பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவின் ஓட்டத்தை கர்நாடகத்தில் தடுத்துள்ளோம் எனக் கூறியுள்ளார்.
குமாரசாமியின் தலைமையிலான மஜதவினர் 37 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். சந்தர்ப்பவாதக் கூட்டணியால் அவர்கள் ஆட்சி அமைத்துள்ளனர். இந்த நிலையில், பிரதமர் மோடி, அமித் ஷாவின் ஓட்டத்தை தடுத்துள்ளதாகக் கூறுவது வேடிக்கையாக உள்ளது.
முதல்வர் குமாரசாமி, பாஜக, பிரதமர் மோடிக்கு எதிரான கட்சிகளை கூட்டுச் சேர்க்க முயற்சிக்கிறார். அது ஒருபோதும் சாத்தியமாகாது. தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியை போல, மாநிலக் கட்சிகளையும் மக்கள் தோற்கடிப்பர். பாஜகவை அதிக தொகுதிகளில் வெற்றி அடையச் செய்துள்ளனர். என்றாலும், தேர்தலில் 149 தொகுதிகளில் வைப்புப் தொகையை இழந்து, மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ள மஜத, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்துள்ளது.
அதிகாரத்தில் இல்லாத போது தேசியக் கட்சிகளைக் குறைகூறும் மஜத, அதிகாரத்துக்காக தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது எந்த வகையில் நியாயம்? குமாரசாமியை முதல்வராக்கியதன் மூலம் குருபா சமுதாயத்தின் எதிர்ப்பை முன்னாள் முதல்வர் சித்தராமையா சம்பாதித்துள்ளார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments