கலைஞர் ஆயிரம் கவிதாஞ்சலி கவியரங்கத்தில் பெங்களூரு கவிஞர்கள் பங்கேற்பு
செப். 7-இல் சென்னையில் நடைபெற உள்ள கலைஞர் ஆயிரம் கவிதாஞ்சலி கவியரங்கத்தில் பெங்களூருவைச் சேர்ந்த கவிஞர்கள் 10 பேர் பங்கேற்கின்றனர்.
செப். 7-இல் சென்னையில் நடைபெற உள்ள கலைஞர் ஆயிரம் கவிதாஞ்சலி கவியரங்கத்தில் பெங்களூருவைச் சேர்ந்த கவிஞர்கள் 10 பேர் பங்கேற்கின்றனர். இது குறித்து பாவணர் பாட்டரங்க பொறுப்பாளர் இராம. இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சென்னை சைதாப்பேட்டை எஸ்.பி.எஸ் திருமண மண்டபத்தில் செப். 7-ஆம் தேதி முன்னாள் மேயர் மா.சுப்ரமண்யம் தலைமையில் கலைஞர் ஆயிரம் கவிதாஞ்சலி கவியரங்கம் நடைபெற உள்ளது. இதில் பெங்களூருவைச் சேர்ந்த இராம. இளங்கோவன் தலைமையில் அ.ம.ரவிச்சந்திரன், கோ.சி.சேகர், இரா.லாலாலஜிபதி, அ.கமல்முகமது, சாரதி, சேரா.கார்த்தி உள்ளிட்ட 10 கவிஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.