"நாட்டு நலனைப் பாதுகாப்பது அனைவரின் கடமையாகும்'
நாட்டு நலனைப் பாதுகாப்பது நம் அனைவரின் கடமையாகும் என்று சிறுநீரக மருத்துவர் கோவர்தன் ரெட்டி தெரிவித்தார்.
நாட்டு நலனைப் பாதுகாப்பது நம் அனைவரின் கடமையாகும் என்று சிறுநீரக மருத்துவர் கோவர்தன் ரெட்டி தெரிவித்தார்.
கோலார் தங்கவயலில் செவ்வாய்க்கிழமை நடந்த ஸ்ரீசுமதி ஜெயின் உயர்நிலைப்பள்ளியின் 1992-93-ஆம் ஆண்டு முன்னாள் மாணவர்களால் நடத்தப்பட்ட பள்ளியின் வெள்ளிவிழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அவர் பேசியது: இந்தப் பள்ளியில் படித்த நான் இன்றைக்கு மருத்துவராகப் பணியாற்றி வருகிறேன். பள்ளியில் படிக்கும்போது, நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்று ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்தனர். இன்றைக்கு ஐஏஎஸ் அதிகாரிகளாக, மருத்துவர்களாக, காவல் துறை அதிகாரிகளாக, வழக்குரைஞர்களாக, வணிகர்களாக, அதிகாரிகளாக, அரசியல்வாதிகளாக பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். நாம் எந்த தொழிலில் ஈடுபட்டு வந்தாலும், அந்தந்த தொழிலில் சிறப்பாகச் செயல்படுவதோடு, நாட்டுக்கும் சேவையாற்றுவது போலாகும். நாட்டு நலனைப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். அந்த கடமையில் இருந்து வழுவக் கூடாது என்பதை முன்னாள், இன்னாள் மாணவர்கள் மறக்கக்கூடாது. பள்ளியில் படித்த மாணவர்களை பெரியவர்களான பிறகு சந்திப்பதே மகிழ்ச்சியான தருணமாகும் என்றார் அவர்.
முன்னாள் மாணவர் வழக்குரைஞர் பாஸ்கர் பேசியது: இந்தப் பள்ளியில் பயின்ற பலர் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டனர். அந்த பழைய நண்பர்களை ஒன்றுதிரட்டி சந்திப்பது உள்ளபடியே மகிழ்ச்சியான அனுபவமாகும் என்றார் அவர். நோய்வாய்ப்பட்டிருந்த பள்ளி மாணவருக்கு முன்னாள் மாணவர்கள் நிதியுதவி அளித்தனர்.
விழாவில், பள்ளிச் செயலாளர் சோஹன்லால், முதல்வர் நாகேஷ், முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் சுனில், பாபு, சத்யா, வினோத், நந்தகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.