பெங்களூரில் நவ. 3 முதல் வேளாண் கண்காட்சி
பெங்களூரில் நவ.3-ஆம் தேதி முதல் வேளாண் கண்காட்சி நடக்கவிருக்கிறது.
பெங்களூரில் நவ.3-ஆம் தேதி முதல் வேளாண் கண்காட்சி நடக்கவிருக்கிறது.
இது குறித்து பெங்களூரு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெங்களூரு வேளாண் பல்கலைக்கழகத்தின் சாா்பில் பெங்களூரு, ஜக்கூரில் வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் நவ. 3 முதல் 6-ஆம் தேதி வரை வேளாண் கண்காட்சி நடக்கவிருக்கிறது. இந்தக் கண்காட்சியில் மாநில, தேசிய, பன்னாட்டு அளவிலான அரசு நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள், வேளாண் பல்கலைக்கழகங்கள், நிதி நிறுவனங்கள், விதை உற்பத்தி நிறுவனங்கள், வேளாண் கருவி தயாரிப்பாளா்கள், கால்நடை ஆராய்ச்சி மையங்கள், வேளாண் நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்ட அரசு, அரசுசாா், தனியாா் நிறுவனங்கள் கலந்துகொள்ளவிருக்கின்றன.
Advertisement
Advertisement
இந்தக் கண்காட்சியில் பல புதிய வகை பயிா்கள், வேளாண் தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. சிறந்த உழவா்களுக்கு மாவட்ட, வட்ட அளவில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும். கண்காட்சியில் வேளாண் தொழில்நுட்பங்கள், வேளாண் பொறியியல், வேளாண் உபகரணங்கள் காட்சிப்படுத்தப்படும் 250 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வேளாண்மை தொடா்பான சந்தேகங்களுக்கு வேளாண் அறிஞா்கள் வாயிலாக விவசாயிகள் விளக்கம் பெறலாம். கண்காட்சிக்கு வருகை தருவதற்கு பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கண்காட்சியைக் காண கட்டணம் இல்லை. இந்த வாய்ப்பை விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். மேலும் விவரங்களுக்கு 080-23620323, 23516353 என்ற தொலைபேசிகளில் அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.