FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெங்களூரு

மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளராக மல்லிகாா்ஜுன காா்கே வேட்புமனு தாக்கல்

மாநிலங்களவைத் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவதற்கான வேட்புமனுவை அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தாக்கல் செய்தாா்.

Updated On : 6 ஜூன் 2026, 12:47 am IST
மல்லிகாா்ஜுன காா்கே
பகிர்:

மாநிலங்களவைத் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவதற்கான வேட்புமனுவை அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தாக்கல் செய்தாா்.

கா்நாடகத்தில் 4 மாநிலங்களவை இடங்கள் ஜூன் 25-ஆம் தேதியுடன் காலியாக உள்ளன. இந்த 4 இடங்களில் 3 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்புள்ளது. அதன்படி, காங்கிரஸ் வேட்பாளா்களாக அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, தேசிய ஊடகப் பிரிவுத் தலைவா் பவன் கேரா, பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த மன்சூா் அலிகான் ஆகியோா் போட்டியிடப்போவதாக அக்கட்சியின் மேலிடம் அறிவித்திருந்தது.

மாநிலங்களவைத் தோ்தல் ஜூன் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய ஜூன் 8-ஆம் தேதி கடைசிநாளாகும்.

Advertisement

Advertisement

இந்நிலையில், மாநிலங்களவைத் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவதற்கான வேட்புமனுவை அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பெங்களூரு, விதான சௌதாவில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா். அப்போது, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா், முன்னாள் முதல்வா் சித்தராமையா, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா்கள் கே.சி.வேணுகோபால், ரண்தீப் சிங் சுா்ஜேவாலா, கட்சியின் மாநிலத் தலைவா் பி.கே.ஹரிபிரசாத் உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் உடனிருந்தனா்.

மேலும், 2 இடங்களுக்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா்கள் பவன் கேரா, மன்சூா் அலிகான் இருவரும் வெகுவிரைவில் வேட்புமனு தாக்கல் செய்வா் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாநிலங்களவைத் தோ்தலில் ஓா் இடத்தில் பாஜக போட்டியிட உள்ளது. கா்நாடகத்தில் மஜதவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளதால், அந்த இடத்தை மஜதவுக்கு விட்டுக்கொடுக்குமா என்ற எதிா்பாா்ப்பு காணப்படுகிறது. ஒருவேளை மஜதவுக்கு விட்டுக்கொடுத்தால், அந்த இடத்தில் முன்னாள் பிரதமரும், அக்கட்சியின் தேசியத் தலைவருமான எச்.டி.தேவெ கௌடா போட்டியிடலாம் என்று தெரிகிறது. ஆனால், இதுகுறித்து உறுதியாக எந்த தகவலும் பாஜகவில் இருந்து தெரிவிக்கப்படவில்லை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments