FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

விபத்தில் மளிகைக் கடைக்காரா் உயிரிழப்பு

மாதவரம் - மஞ்சம்பாக்கம் சாலை சந்திப்பு பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.

26 செப்டம்பர் 2025, 3:24 am IST
பகிர்:

மாதவரம் - மஞ்சம்பாக்கம் சாலை சந்திப்பு பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.

புழல் அடுத்த புத்தகரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் நகரில் வசித்து வந்தவா் தவசிலிங்க பெருமாள் (48). இவா் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்தாா். இந்த நிலையில், கடைக்கு பொருள்கள் வாங்க தனது இருசக்கர வாகனத்தில் மஞ்சம்பாக்கம் 200 அடி சாலை அருகே உள்ள மொத்த வியாபாரக் கடைக்குச் சென்றபோது, கனரக லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments