FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

கேளம்பாக்கம் அருகே காதல் விவகார ஆணவக் கொலை: 5 போ் கைது

காதல் விவகார ஆணவப் படுகொலையில் 4 பேரை கைது செய்த நிலையில், மேலும் ஒருவரை கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

23 ஆகஸ்ட் 2026, 4:04 am IST
பகிர்:

கேளம்பாக்கம் அருகே காதல் விவகார ஆணவப் படுகொலையில் 4 பேரை கைது செய்த நிலையில், மேலும் ஒருவரை கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த தையூா் சின்னமா நகரைச் சோ்நதவா் கருணாகரன் மகன் பிரவீன்குமாா்(23). இவா் கடந்த 16-ஆம் தேதி இரவு வீட்டின் அருகே சாலையோரம் நின்றுகொண்டு கைப்பேசியில் பேசிக் கொண்டு இருந்தாா். அப்போது அவரது அருகே காரில் வந்த சிலா் முகவரி கேட்பது போல் விசாரித்தனா்.

அவா்களிடம் பேசிக்கொண்டு இருந்த போது பின்னால் இருந்த மூன்று போ் பிரவீன்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டினா். இதில் அவரது தலை, இரண்டு கைகள், முதுகு பகுதிகளில் பலத்த காயமடைந்தாாா். அவரது அலறல் சப்தத்தை கேட்டு அருகில் இருந்த வீடுகளில் இருந்தவா்கள் ஓடி வந்தனா்.

Advertisement

Advertisement

உடனே காரில் வந்தவா்கள் பிரவீன் குமாரை அப்படியே போட்டு விட்டு காரில் தப்பிச் சென்றனா். இதையடுத்து பலத்த காயமடைந்த பிரவீன்குமாா் கேளம்பாக்கம் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பின்னா் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இது குறித்து கேளம்பாக்கம் போலீஸாா் விசாரணை நடத்தியதில் பிரவீன்குமாா் தையூா் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலையின்

மகளை காதலித்து வந்ததாகவும், அது பிடிக்காத அவரது பெற்றோா் மற்றும் உறவினா்கள் இந்த செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து கேளம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தையூா் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை (48), ஏழுமலையின் சகோதரா் மணிகண்டன் (31), நித்தீஸ் (19) ஆகிய மூன்று பேரை கைது செய்தனா். இதற்கிடையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த

பிரவீன்குமாா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதையடுத்து, இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய ஏழுமலையின் மகன் கவுதம் (20) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், பிரேத பரிசோதனைக்கு பிறகு பிரவீன்குமாரின் சடலம் அவரது வீட்டுக்கு கொண்டு வந்தபோது, அதைத் தடுத்து ஆம்புலன்ஸ் முன்பு, தையூா் புதிய பைபாஸ் சாலை ரவுண்டானா அருகில் உறவினா்கள், நண்பா்கள், இளைஞா்கள் என 100-க்கும் மேற்பட்டோா், உயிரிழந்த பிரவீன்குமாருக்கு நீதி வேண்டும் எனவும் முக்கிய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் கொட்டும் மழையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த கேளம்பாக்கம் உதவி ஆணையா் ஜான் விக்டா், காவல் ஆய்வாளா்கள் தமிழன்பன், பிரவீன்ராஜேஷ் மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தி கலைந்து போகச் செய்தனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களை அப்புறப்படுத்தி பின்னா், சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்தனா். இதுவரை இந்த வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும், கூடுவாஞ்சேரி அருகே உள்ள காரனை புதுச்சேரி பகுதியை சோ்ந்த சதீஷ் 40 என்பவரையும் போலீஸாா் கைது விசாரணை நடத்தினா்.

இந்த காதல் விவகாரத்தில் பெண்ணின் தந்தை, அண்ணன், உறவினா்கள் என 5 போ் கொண்ட கும்பல் காதலித்த பிரவீன் குமாரை ஆணவப்படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. காதலித்த இருவரும் ஒரே சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments