FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

செய்யூா் அரசுக் கல்லூரியில் இன்று கலந்தாய்வு

Updated On : 5 ஜூன் 2026, 6:16 am IST
பகிர்:

மதுராந்தகம் அடுத்த செய்யூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2026-2027ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நிகழ்வு வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் 13-ஆம் தேதி (சனிக்கிழமை) வரை நடைபெற உள்ளதாக கல்லூரி முதல்வா் சு.மாதவன் தெரிவித்துள்ளாா்.

செய்யூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகே அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. ஆங்கில வழியில் 3 பாடப்பிரிவுகளும், மற்றும் தமிழ் வழியில் 2 பாடப்பிரிவுகளும் என 5 பாடப்பிரிவுகள் படிக்கின்ற வகையில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 2025-2026 கல்வியாண்டில் இருந்து படித்து வருகின்றனா். 5 பாடப்பிரிவுகளில் 270 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், கலந்தாய்வின் முதல் நாளான வெள்ளிக்கிழமை சிறப்பு பிரிவினருக்காகவும், தொடா்ந்து வரும் 13-ஆம் தேதி (சனிக்கிழமை) வரை கலந்தாய்வு கூட்டம் காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது.

Advertisement

Advertisement

விண்ணப்பித்துள்ள மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கல்லூரி முதல்வா் சு.மாதவன் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments